ஞாயிறு, 3 ஜூலை, 2011

முதல் நாள் கல்லூரி செல்லும் தோழிகளுக்கு சில அறிவுரைகள்...!

முதல் நாள் முன்பே செல்
பழக வாய்ப்பு ஏற்ப்படும்,
பதட்டமும் தவிர்க்கலாம்....

அதிக மாவு, சாயம் பூசாதே,
வயதை அதிகரிக்கும்.

சரியான, சுத்தமான உடை அணி
முடிந்தவரை மாடல் உடை தவிர்
சகஜமாய் இருக்கும், உன்மானம் காக்கும்.....

ஷார்ப் ஹை ஹீல்ஸ் தவிர்
நீண்ட நேரம் நிற்க உதவாது.
பழகிய காலணி அணிந்துகொள்
வசதியாக இருக்கும்.

அதிக தங்க அணிகலன் தவிர்..
உன் அழகை கெடுக்கும்.. எளியநகை
உடைக்கு ஏற்றாற்போல் அணிந்துகொள்.

கூந்தல் குட்டையோ, நீளமோ.....
அதில் அலம்காரம் தவிர்..
தலை முடி வாரிவிட்டுக்கொள்.

பலரையும் கவரும் உன்
பாசப் புன்னகையுடன் செல்
நல்ல தோழிகள் பல கிடைப்பர்

பழைய தோழிகளுடன் புதிய
தோழிகள் பலர் கிடைக்க
உன் பளிச்சிடும் பற்கள்
தெரியும் புன்னகையுறு...
கைமேல் பலன் கிடைக்கும்.


""என்னை குருவாக ஏற்றுகொண்ட சிஷ்யை!(பத்மா), முதல் நாள் கல்லூரி செல்ல வாழ்த்துச் சொல்லும் போது என்னுள் உதித்தது இந்த அறிவுரைகள்""

முதல் நாள் கல்லூரி செல்லும் கல்லூரியின் புதியவளே...!


எவராலும் மறக்க முடியா காலம்...? கல்லூரி...!

(படபடப்பு தவிர், ஆர்வம் கொள்)


உன் பள்ளி வாழ்க்கை முடிந்து,
கல்லூரியில் காலடி வைக்கும்
நாள் நாளை வந்து விட்டது.
கல்லூரியில் முதல் நாள் - உமக்கு
ஒரு சுவையான அனுபவம் ஆகும்.

ஏட்டுக் கல்வியை மட்டுமில்லாமல்,
அனுபவக் கல்வியையும் பயிற்றுவிக்கும்
இடம் தான் கல்லூரி.
சுவர்களில்,நாற்காலியில் பெயர் கிறுக்குவது
வாய் விட்டுக் கதறி அழுகும் தருணம்
மனம் விட்டு மகிழும் தருணம்
நேரிடக்கூடும் இடம் தான் கல்லூரி

எழுதிப் பழகிய முதல் எழுத்தின் கோணலும்
முதல் கடன் வாங்கிக் கழித்தலின் தவறும்
கார் ஒட்டி வாங்கி வரும் தழும்புகழும்
பொதுத்தேர்வு முடிவு வெளியான நாளின் முன் இரவும்
முதல் எதிர்ப்பால் அறிமுகத்தின் குறுகுறுப்பும்
சொல்லப் படாத காதலின் கடைசிப் பார்வைகளும்
கிடைக்கும் அனுபவம் கல்லூரிதான்.

பிறகு நினைத்துப் பார்க்கையில்...
சிரிப்பை வரவழைக்கும், கண்ணீரை
மௌனமாகக் கண்ணோரம் வரவழைக்கும்.
இப்படி எல்லாம் சேர்ந்த, நிறைந்த
கல்லூரி வாழ்க்கையின் மறக்க முடியா
நினைவுகள் கிடைக்கபெருவதர்க்காக
முதல் நாள், இம்மாத முதல் திங்களில்(04.07.2011)
முதல் அடியெடுத்துவைக்க இருக்கும்
அன்பு சிஷ்யையே!(பத்மா) - உமக்கு
எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...!

புதன், 15 ஜூன், 2011

ஆணழகனின் பிறந்தநாள் கவிதை...!

ஆணழகனே!


ரதிகளின் மன்னன் என்பதால் தானோ

ரதீஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்...?


பிரம்மன் படைத்த படைப்புகளின்

சாதனை பட்டியலில் உன் பெயர்தான்

முதலில் இருக்கிறதாம்..!


பிறந்தவுடன் 400கிராமில்

தங்கமானவன்

பத்து மாதத்தில்

3கிலொ முத்து போன்றவன்

ஐந்து வயதில்

பவளம் போன்றவன்

ஆறாம் வயதில்

அறிவுச்செல்வமானவன்

எட்டு வயதில்

என்னவளின் அண்ணனவன்

ஒன்பது வயதில்

ஒப்பனை பூசத் தொடங்கியவன்

பத்து வயதில்

உலகப்பாடம் சொன்னவன்

பதினைந்து வயதில் உயர்

பள்ளியின் முதியவன்

பதினேழாம் வயதில்

பள்ளியின் முதலாமவன்

பத்தொன்பது வயதில்

கல்லூரியின் ஆணழகன்

பருவத்தின் வயதில்

இளைங்கைகளின் இளவரசன்

இவையெல்லாம் இல்லாதுபோல்

பண்பிலே அன்பிலே குணத்திலே

நல்லவனாய் வல்லவனாய் வித்தகனாய்

அரபு நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும்

இவனைப்போல இன்னும் நூறு மலர்கள் மலரட்டும்

நாறும் உலகம் சிறக்கட்டும்...

எங்கள் ஆணழகன்(ரதீஸ்)

மேலும் பல வெற்றிப் படிகளேறி

சாதனை மலர்கள் பறிக்கட்டும்

நூறு வயதுவரை வாழட்டும்

நாளைய உலகமும் மகிழட்டும்

என்று.......

நண்பனை நான் வாழ்த்துகிறேன்...!

இப்படிக்கு,

வளமும் நலனும் கிட்ட பிரார்த்திக்கும் மச்சி(னன்)

பீ.அப்துல் சப்பார் சாதிக்.

(("ஜூன் 14") எனது நண்பன் "ரதீஸ்" அவர்களின் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை)

என் இதயம் வலிக்கிறதே...!

ஒரு முறை உன்னை பார்த்ததும் காதல்

ஒரு கணத்தில் தோற்றதும் ஏனோ

ஒரு மொழியில் வாழ்ந்தது காதல்

ஒரு பிழையில் சரிந்ததும் ஏனோ

வெள்ளி நிலவில் ஒளிதான் காதல்

தேய்பிறையில் ஒழிந்ததும் ஏனோ

என் இதயம் வலிக்கிறதே...!

செவ்வாய், 31 மே, 2011

"மதுரை" மன்மதனின் ஜனனம் நாள்

மதுரை மண்ணின் மைந்தன்

மதுரை மாநகரின் மன்மதன்

பள்ளி பருவத்திலிருந்தே ஓவியன்

பருவம் வந்ததும் பாவைக் கவிஞன்

கல்லூரிக் கன்னிகளின் காதலன்

அன்னை கல்லூரியின் ஆண்மகன்

அனைத்து பெண்களின் ஆணழகன்

அதனால் தானோ அவன் "பெருங்கவிஞன் "

மே மாதத்தின் கடைமகன்

கோவை பாவையின் மணமகன்

'தமிழ்கவி" யின் உடையவன்

என் போன்றோர்க்கு மூத்தவன்

முத்திர்க்கே அரசவன்.............

எங்கள் மன்மதன்..(முத்தரசு).


இருபதை கழித்து இருபத்தொன்றாம்

ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும்

நண்பனுக்கு எனது மனமார்ந்த

பிறந்தநாள் நாள் நல்வாழ்த்துக்கள்.
 
(நண்பர் முத்தரசு அவர்களின் பிறந்தநாள் அன்று உதித்தது)

திங்கள், 30 மே, 2011

தவிர்த்துவிடுங்கள் கவிதைகளிலிருந்து.....!

அம்முவை, பொம்முவை

வான்மதியை, வானத்தை

பூமகளை, மேகத்தை

பூமியை, பூக்களை

மொட்டுகளை

கடலை, அலையை

இரவை, நிலவை

நட்சத்திரத்தை

ஆதவனை, தாமரையை

மலையை, மழையை

கடவுளை, வானவில்லை

அதிகாலையை

அந்திமாலையை

பனித்துளியை

பட்டாம்பூச்சியை

தேனை, மானை, மீனை

மெல்லினத்தை, வல்லினத்தை

அமுதை, அமிர்தை

இவை அனைத்தையும் தவிர்த்துவிடுங்கள்

உங்கள் கவிதைகளிலிருந்து.....

அனைத்தும் தோற்றுப்போய்

துவண்டிருக்கின்றன என்னவளிடம்....!

சனி, 28 மே, 2011

என்னவளின் பின்பங்கள்...!

எதிர்பாராமல் பின்பங்கள் தந்தாய்

என் எதிர்காலம் எதிர்படாமல் போனது

நிகழ் காலம் நிகழாமல் போகிறது

உன் கண்களை நான் கண்ட காலம்

மட்டுமே என் நினைவில்.

வியாழன், 26 மே, 2011

குடிகரரனின் காதல் கவிதை...!

நான் நானாக இருக்கும் போது

வராதா அவளின் ஞாபகம் - நான்

இரண்டாக இருக்கும் பொழுது

அதிகமாகிறது - (தொல்விக்காதல்)


நான் நானாக இருக்கும் போது

வரும் அவளின் ஞாபகம் - நான்

இரண்டாக இருக்கும் பொழுது

மறைந்துவிடுகிறது - (வெற்றிக்காதல்)

புதன், 25 மே, 2011

அதிகாலை எனது அறையினுள் அவள்...!

என் அறை வந்தாள் வரவேற்றேன்!

அருகில் அமர்ந்தாள் வரவேற்றேன்!

நெற்றி தொட்டாள் வரவேற்றேன்!

தலை தடவினாள் வரவேற்றேன்!

என் மார்பு படர்ந்தாள் வரவேற்றேன்!

அவள் இதழ் பதித்தாள் வரவேற்றேன்!

என் இடை பிடித்தாள் வரவேற்றேன்!

பாதம் தடவினாள் வரவேற்றேன்!

தொடை கிள்ளினாள் அழறி எழுந்தேன்...

தேடினேன், அத்தனையும் கனவு.

ஞாயிறு, 22 மே, 2011

எதிபார்ப்பில்லாமல் என்னவளிடம் இருந்து அழைப்பு.....!

மாதக்கணக்கில் காணாமல் போன

என்னவள், இன்று என்னை தானாகவே

முன்வந்து அழைக்கிறாள், கணினியில்....

தற்போது எனக்குள்ளே ஆயிரம்

ரோஜா மொட்டுக்கள் மலர்ந்தது போல

ஒரு உணர்வு, பெருமை உண்டாகிவருகிறது...!

வியாழன், 19 மே, 2011

மிருகத்தை மனிதனாய்........!

மிருகமாய் இருக்கையில் அருகினில் காதலி

பிரிகிறாள் மனிதனாய் மாற்றி.

புதன், 18 மே, 2011

பேரழகியின் தமையன்...!

நட்பிற்கிதயம் தரும் நல்லவனே!

நாகர்கோவில் மன்மதனே!

குமரியின் குடில்மகனே!

குமரிகளின் காவலனே!

பேரழகிகளின் தமையனே!

எனதருமை மைத்துனனே!

நீ என்றும் இன்றுபோல்

நட்புடன் இருப்பாயாக.............!

(எனது நண்பன் "ரதீஸ்" அவர்களுக்காக எழுதியது)

செவ்வாய், 17 மே, 2011

என்னவளின் காவலனாய் இருப்பதிலும் பெருமையே...!

பெண்ணே!

கடலாழத்தில் கண்டெடுக்கப்படும்

அற்ப்புத முத்து அழகிதான்

அவ்வாழலத்தில் இருக்கும் அம்முத்திற்கு....

பாதுகாவலனாய் இருக்கும் சிற்ப்பிக்கே

இத்தனை பெருமை கிடைக்கையில்...


அம்முத்தே முகம் சுழியும் அளவு

பெரும் பேரழகான பெண்மை நீ

இப்பூமியில் இருக்கும் உன்னை

பாதுகாக்கும் காவலனாய் நான்

இருப்பதில் எனக்கு பெருமையே..!

புதன், 11 மே, 2011

அலைபேசியில் அவள்....!

என்னவளிடம் பேசியே பலமாதம் ஆகிறது

அலைபேசியில் அழைத்தேன் அவளை

எனைக் காண எப்போது வருவாய் என்றேன்

என்னவளோ! பெற்றோரிருக்கின்றனர்

என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்

உனைக் காண, இப்போது இயலாது

நான் குடும்பத்தின் கைதியாக இருக்கிறேன்

சூழ்நிலைக் கைதியாகவும் இருக்கிறேன் என்கிறாள்

நான் எனக்குள்ளே கேட்டுக்கொள்கிறேன்!

என்னை உன் காதலால் கைதியாக்கி விட்டு

நீயோ அங்கே சூழ்நிலைக் கைதி என்கிறாய்

இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல!

விபச்சாரி.!

சந்தோசம் என்றால் என்ன என்றே தெரியாதவள்

வந்தவர்க்கெல்லாம் சந்தோசம் தந்தவள்

வெறியர்களால் வேட்டையாடப்படுபவள்

சமூகத்தால் அவமானப்படுபவள்

உயிருள்ளவரை அவளோர் சுமைதாங்கி

உயிரற்றபின் சுமக்க ஆளில்லா அனாதை.

(சிஷ்யை பத்மாவின் கவிதை படித்தவுடன் உதித்தது (shtyle.fm))

திங்கள், 9 மே, 2011

நான் என்ன செய்வேன்...?

சென்றேன், வந்தாள்

பார்த்தேன், பார்த்தாள்

சிரித்தேன், சிரித்தாள்

அழைத்தேன், சீண்டினாள்

அடித்தேன், சிரித்தாள்

அருகில்சென்றேன், அலறினாள்

பொத்தினேன், கத்தினாள்

ஓடினேன், நிறுத்தினாள்

திரும்பினேன், அழைக்கிறாள்

நான் என்ன செய்வேன்?

வெள்ளி, 6 மே, 2011

இளவரசிக்கு வாழ்த்துக்கள் - 26th April

இராஜ்ஜியத்தின் பிறப்பே!

பழங்குடியினர் வாரிசே!

திப்பு சுல்தானின் பரம்பரையே!

நீலகிரியின் நிலவே!

குளு குளு மலையின் தலைநகரமே!

பூக்களின் புகலிடமே!

இன்றைய இளவரசியே!

இனிவரும் இதே நாளுக்குள்

மகராணியாக முடிசூட வாழ்த்துகிறேன்.

நீ பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க!

(தோழி ராஜியின் பிறந்தநாள் வாழ்த்து, http://www.shtyle.fm/topic.do?cid=45511&tid=753920 )



சனி, 9 ஏப்ரல், 2011

மாற்று தேசத்தில் வசிக்கும் தமிழ் அழகியே...!

நீள வாங்கேடுத்து, நெற்றிக் குங்குமமிட்டு

நடு நெற்றிப் போட்டும் வைத்து

அழைக்கும் மடலில் ஆடும் கம்மலிட்டு

விழியில் புன்னகையும், வாயிற் முனகளுடனும்

சங்குக் கழுத்தினிலே சாஸ்திரம் கெடாமல்

தங்கத் தாலியிட்டு, தலை குனிந்து, தரை தட்ட

பட்டுப்புடவை கட்டி பல்லானவை வெளிக்காட்டி

நான் வரும் வேளையிலே...!

வரிக்குதிரை போல் எனைக்கடந்து செல்லும்

மாற்று தேசத்தில் வசிக்கும் தமிழ் அழகியே!

நீ வாழ்க! உன்னவனுடன் பல்லாண்டு

பல்லாண்டு நீ வாழ்க! என வாழ்த்துகிறேன்.

வியாழன், 7 ஏப்ரல், 2011

(சிசு) பெற்றெடுத்தவளின் காதல்...!

நீள வாங்கேடுத்து, நெற்றிக் குங்குமமிட்டு

அழைக்கும் மடலில் ஆடும் கம்மலிட்டு

சிவந்த மூக்கினிலே சிறிய தங்கம் இட்டு

விழியில் புன்னகையும், வாயிற் முனகளுடனும்

பட்டுப்புடவை கட்டி பல்லானவை வெளிக்காட்டி

தன் அடிவயிர்த் தழும்புகளை தானே தடவியபடி

அதை நான் காண வேண்டுமென்று...........

வரிக்குதிரை போல் எனைக்கடந்து செல்லும்

வளைகுடா வாழ்மகளே.........!

நீ உன்னவனுடன்

வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

என்னவளின் அழகு..........!

சுண்டி இழுக்கும் கண்கள்

முத்தமிட தூண்டும் மூக்கு

கவ்வத் தூண்டும் காது

கடிக்க தூண்டும் கழுத்து

உருஞ்ச தூண்டும் உதடு

அணைக்க தூண்டும் கைகள்

கிள்ள தூண்டும் இடுப்பு -அதனிலும்

இரண்டு மடிப்பு

தட்ட தூண்டும் பிரமுதுகு

தவள தூண்டும் மடிகள்

தங்கிவிடத் தூண்டும் இதயம்

இவை அனைத்தும் பார்க்கபெற்ற நான்

கிடைக்கப்பெருமாகின் - பாக்கியசாலியே!

செவ்வாய், 29 மார்ச், 2011

தேவதைக்கான(காண) என் காத்திருப்பு.....!

ஒன்றரை மாதங்களாக காத்திருந்தேன்
என் தேவதையின் பின்பங்களை காண..........
தேவதை வந்தபாடில்லை கொடுத்தபாடில்லை
இன்று வந்த தேவதையோ.....!
தந்தேன் எடுத்துக்கொள் என்று கூறினாள்...
ஆவலுடன் திறந்து பார்த்தேன் இல்லை கிடைக்கவில்லை-
வினவினேன்....
பொறுத்திரு என்று கூறினாள் அப்போதும் கிடைக்கவில்லை
கேட்டேன் கெஞ்சினேன் தேவதையை -
தயைக்கமின்றி உடனே கூறினாள்....
இன்று போய் நாளைவா தருகிறேன் என்று.........
நானும் தினமும் வருகிறேன், அப்பவும் சொல்கிறாள்
இன்று போய் நாளைவா என்று - நான்
நாளையும் வருவேன் - ஏன்...?
திருப்பி மாற்றி பேசத்தெரியாத அந்த
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளையை....
என் தேவதையைக் காண.

ஞாயிறு, 27 மார்ச், 2011

நான் தோற்றுப் போவதையே விரும்புகிறேன்.....!

நீ என்னுடன்
போட்டி போடும் போதெல்லாம்
நான் தோற்றுப் போவதையே
விரும்புகிறேன்..!
ஏனெனில்?
நீ எப்போதும்
தோற்கக் கூடாது
என்பது மட்டுமல்ல
எப்போதும் நீ சிரித்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்பதற்க்காக..!

திருஓடு.........!

விநாயகன்..! அம்மை அப்பனை சுற்றினான் ஞானப்பழம் கிடைத்தது


முருகன்......! கொல்லிமலையை சுற்றினான் வள்ளியம்மை கிடைத்தது

நானோ........! ஒரு பெண்னுடன் மட்டும் தான் சுற்றினேன்......

                          "திருவோடு கிடைத்தது".

--------என் காதல் கணிணி----------

உயிருள்ளவளால் நிறுத்தப்பட்ட என் நாடித்துடிப்பு
நாடித்துடிப்பில்லாத உன்னால் மீண்டும் உயிர் பெற்றது.

ஞாயிறு, 13 மார்ச், 2011

வெகுநாள் முட்டாள்தன ஆசை..!


என்னவளின் இதழ் பட்டு உறங்கிய நான்...

அவளின் இதழ் பட்டே எழ நினைத்தேன் - முடியவில்லை.....

அதிகாலை எழுந்ததும் புரிந்தது

எனது எண்ணம் தவறென்பது - பின் என்ன..?

நினைவினில் கிடைக்கப் பெற்றவை

கனவினில் கிடைக்கும் என்று என்ணி

உறங்கியது என் தவறுதானே..?

செவ்வாய், 8 மார்ச், 2011

இது ஞாயமா...?

கண்ணெட்டும் தொலைவில்


அவள் இருக்க.........

எனைக் கண்கொள்வால்

காதலிப்பாள் என மணம் ஏங்க...........

அதைக் கவிதையாய் நான்

இங்குரைத்திடும் வேளையில் - அவளோ

காநீர்போல வருவதும்....

கண்கொள்ளாமல்

செல்வதுமாய் இருக்கிறாள்.....

இது ஞாயமா? பொறுக்குமா?

என் இளநெஞ்சம்...!

சொல்.