செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

கண்டு கொண்டேன் கடவுளை

கடவுளைத் தேடித் தேடி


தேய்ந்து போனது

கால்கள்!

காண முடியாமல்

காய்ந்து போயின

கண்கள்!

இறுதியில்

இமைகளை

மூடிக் கொண்டு

தேடினேன்!

ஞானம் பிறந்தது...

பத்து மாதங்களாய்

கருவறையில் காத்து

பெற்று வளர்த்த

தாயே கடவுள்..!

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

உன்..(..)..நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!

இப்பொழுதெல்லாம்


உனக்கு என்னுடன்

பேசப்பிடிப்பதில்லை

புது நண்பர்கள்

புது உலகமென

புதிய வாழ்க்கையில்

ஐக்கியமாகி விட்டாய்

காத்திருந்த எனக்கு

தனிமை மட்டும்

உன் பரிசாய்

உன் பரிசு

என்று அறிந்ததால்

தனிமையையும்

நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!

செவ்வாய், 28 ஜூலை, 2009

கடவுள் வந்திருந்தார்

மழை வடிவில்


கடவுள் வந்திருந்தார்

ஒழுகும் கூரை

உள்ளே இருப்பவர்களைப் பார்க்க

திங்கள், 27 ஜூலை, 2009

வழி தெரியாமல்...

என்னைவிட்டு அணுஅணுவாய்


நீ விலகுவதை

வலியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

தடுக்கும் வழி தெரியாமல்...

வெள்ளி, 15 மே, 2009

நினைவுகள் நெஞ்சோடு........!

நிலவொளியில்...


நீலக் கடற்கரையில்...

நீ பதித்த கால் தடமாய்

உன் நினைவுகள் என் நெஞ்சோடு.....

சனி, 2 மே, 2009

அடங்காக் காதல் மழை..!

நீ எனைச் சந்தித்தால்
எனக்குள் இன்ப மழை..!
நீ எனைப் பார்த்துச் சிரித்தால்
எனக்குள் மின்னல் மழை..!
நீ எனைப் பற்றி பேசினால்
எனக்குள் கவிதை மழை..!
நீ எனைக் கட்டியணைத்தால்
நமக்குள் (அடங்காக்) காதல் மழை..!