வெள்ளி, 29 ஜனவரி, 2010

காதல் போதை..!!

உன் திருவாய் மலர்ந்து என்னிடம் நீ
ஒரு வார்த்தை பேசியதற்கே
நான் வானத்தில் மிதக்கிறேன்
என்றால்..?
நீ தினமும் என்னிடம் பேசினால்
நான் வானத்திலேயேதான் குடியிருப்பேன்..!
ஓ… இதுதான் 'காதல் போதை' என்பதா..?

வியாழன், 28 ஜனவரி, 2010

பெண் சிசுவின் கேள்வி..!

அம்மா...
நான் செய்த
தவறென்ன...
உணர்ச்சியால்
நீ செய்த
திரைமறைவு
தப்பிற்கு...

நானல்லவா
குப்பை தொட்டியில்
வீசப்பட்டிருக்கிறேன்..?

திங்கள், 25 ஜனவரி, 2010

உயிர்ப்பித்தல்..!

தென்றல் காற்றும் உன் நினைவுகளும்

ஒன்றுதான் போல…
தென்றல் காற்று என்
இதய அறைகளை நிரப்பியபடி
வினாடிக்கு வினாடி
என்னை உயிர்ப்பித்து விட்டுச் செல்கிறது..!
உன் நினைவுகளோ...
என் இதயத்தை நிரப்பி விட்டு
நம் காதலை ஒவ்வொரு வினாடியும்
உயிர்ப்பித்து விட்டுச் செல்கிறது..!

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

உன் புன்னகைக்கு..?

காதில் ஆடும் லோலாக்கு
மூக்கில் மின்னும் மூக்குத்தி
கழுத்தில் நிறைந்த தங்கச் சங்கிலி
விரலில் ஜொலிக்கும் வைர மோதிரம்
என ஒரு பொன்னகைக் கூடமே
உன் அழகிற்கு அழகு
சேர்த்தாலும்..?
அவைகள் என்றுமே
உன் புன்னகைக்கு ஈடாகாது..!

வியாழன், 21 ஜனவரி, 2010

உயிருள்ள சிற்பமே..!

காஜிராஹோ சிற்பங்கள்
கண்ணைக் கவரும்..!
மாமல்லபுரத்துச் சிற்பங்கள்
மனதைக் கவரும்..!
உயிரற்ற சிற்பங்களுக்கே
இவ்வளவு வசீகரம் எனில்
உயிருள்ள சிற்பமே
உன்னழகிற்கு கேட்கவா வேண்டும்..!

புதன், 20 ஜனவரி, 2010

சுவாசித்து மகிழ்கிறாய் என்பதற்க்காக..!

என் கவிதைகளை

நீ வெறுமனே
வாசித்துப் போகாமல்
சுவாசித்து மகிழ்கிறாய்
என்பதற்க்காகவே…
நாள்தோறும்...
கவிதைகளாக
எழுதிக் கொண்டிருக்கிறேன்..!
உனக்காகவே...
அதுவும் உன்னைப் பற்றியே..!

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

வசியம் செய்தாய்..!

என்னைத்தானே வசியம் செய்தாய்..!

என் பேனாவை எப்படி
வசியம் செய்தாய்..?
பார்… அது எப்போதும்
உன் பெயரையே
கிறுக்கிக் கொண்டிருக்கிறது..!

வெள்ளி, 15 ஜனவரி, 2010

மலருக்காக மலரிடம் நான் விட்ட தூது..!

உன் கார்மேகக் கூந்தலில்


பூச்சூடுவதற்க்காக

நான் வாங்கிய

ரோஜாமலரிடம் சொன்னேன்...


‘மெல்லிய மலரே...

உன்னை விட மென்மையானவளிடம்

உன்னைச் சூடக் கொடுக்கிறேன்...

அவள் கார் மேகக் கூந்தலில்

அழுத்தமாய் உட்காராதே

அவளுக்கு காயம் பட்டுவிடும்...’ என்று...



மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...’ என்றது


அவளைப் பார்த்ததும்

அழகாய் ஒரு புன்னகையை

வீசி விட்டு...

அப் பெண்மையிடம்

என் காதலை மென்மையாய்ச் சொல்... என்றேன்


மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!


என்னவளின் மனசு

போல உன் நிறமிருக்கிறது

என்று பெருமை கொள்ளாதே..?

அவளது மனது..

வெண்ணிலவை விட வெண்மையானது

வெண் பனியை விடத் தூய்மையானது..!

என்றேன்..!


மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...’ என்றது..!


உனக்கு வாசமில்லை என்று வருந்தாதே...

அவளுக்கு வாசமுண்டு...

அவள் வாசத்தை

நீ சுவாசித்தால்

நீயும் மணக்கும் மலராவாய்...

மல்லிகைப் பூவாவாய்...

நீ மணந்தால் மட்டும் போதாது

அவள் வாசத்தை வாங்கி

என்னிடம் அனுப்பு

நானும் அதை சுவாசிக்க வேண்டும்...

என்றேன்...


மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...


அப்படியே செய்கிறேன்’ என்றது..!


என்னன்பையும்

என் காதலையும்

அவளிடம் அன்பாய்ச் சொல்...

அவள் நினைவில்தான் வாழுகிறேன்...

நிஜத்தில் அவளின்று வாடுகிறேன்

என்றும் சொல்லென்றேன்..!


மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!


சொல்லி விடுமென்று காத்திருந்தேன்..?

அந்த மலரோ...

உன் கார்மேகக் கூந்தலில்

ஏறிய மயக்கத்தில்

அத்தனையும் மறந்துவிட்டு

அசடு வழிந்தபடி சிரித்தது..!

அதுவும் என்னைப் போலவே..!

மலரிடம் நான் விட்ட தூது..!

உன் கார்மேகக் கூந்தலில்

பூச்சூடுவதற்க்காக
நான் வாங்கிய
ரோஜாமலரிடம் சொன்னேன்...

‘மெல்லிய மலரே...
உன்னை விட மென்மையானவளிடம்
உன்னைச் சூடக் கொடுக்கிறேன்...
அவள் கார் மேகக் கூந்தலில்
அழுத்தமாய் உட்காராதே
அவளுக்கு காயம் பட்டுவிடும்...’ என்று...

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது

அவளைப் பார்த்ததும்
அழகாய் ஒரு புன்னகையை
வீசி விட்டு...
அப் பெண்மையிடம்
என் காதலை மென்மையாய்ச் சொல்... என்றேன்
மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!

என்னவளின் மனசு
போல உன் நிறமிருக்கிறது
என்று பெருமை கொள்ளாதே..?
அவளது மனது..
வெண்ணிலவை விட வெண்மையானது
வெண் பனியை விடத் தூய்மையானது..!
என்றேன்..!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது..!

உனக்கு வாசமில்லை என்று வருந்தாதே...
அவளுக்கு வாசமுண்டு...
அவள் வாசத்தை
நீ சுவாசித்தால்
நீயும் மணக்கும் மலராவாய்...
மல்லிகைப் பூவாவாய்...
நீ மணந்தால் மட்டும் போதாது
அவள் வாசத்தை வாங்கி
என்னிடம் அனுப்பு
நானும் அதை சுவாசிக்க வேண்டும்...
என்றேன்...

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...
அப்படியே செய்கிறேன்’ என்றது..!

என்னன்பையும்
என் காதலையும்
அவளிடம் அன்பாய்ச் சொல்...
அவள் நினைவில்தான் வாழுகிறேன்...
நிஜத்தில் அவளின்று வாடுகிறேன்
என்றும் சொல்லென்றேன்..!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!

சொல்லி விடுமென்று காத்திருந்தேன்..?
அந்த மலரோ...
உன் கார்மேகக் கூந்தலில்
ஏறிய மயக்கத்தில்
அத்தனையும் மறந்துவிட்டு
அசடு வழிந்தபடி சிரித்தது..!
அதுவும் என்னைப் போலவே..!

செவ்வாய், 5 ஜனவரி, 2010

என்னுயிரைச் சிறை பிடித்தாய்..!

அன்ன நடை நடந்து வந்து


அடி மனதை வருடி விட்டாய்..!

பின்னலிடை போட்டு வந்து

பித்தம் கொள்ள வைத்து விட்டாய்..!

மின்னலொரு பார்வையிலே

எனைக் காதலிக்க வைத்து விட்டாய்..!

உன்னுயிரைத் திறந்து விட்டு

என்னுயிரைச் சிறை பிடித்தாய்..!

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

என்ன வித்தியாசம்..?

கதைக்கும்


கவிதைக்கும்

என்ன வித்தியாசம்..?

நான் பேசினால்

அது கதை..!

நீ பேசினால்

அது கவிதை..!