திங்கள், 30 மே, 2011

தவிர்த்துவிடுங்கள் கவிதைகளிலிருந்து.....!

அம்முவை, பொம்முவை

வான்மதியை, வானத்தை

பூமகளை, மேகத்தை

பூமியை, பூக்களை

மொட்டுகளை

கடலை, அலையை

இரவை, நிலவை

நட்சத்திரத்தை

ஆதவனை, தாமரையை

மலையை, மழையை

கடவுளை, வானவில்லை

அதிகாலையை

அந்திமாலையை

பனித்துளியை

பட்டாம்பூச்சியை

தேனை, மானை, மீனை

மெல்லினத்தை, வல்லினத்தை

அமுதை, அமிர்தை

இவை அனைத்தையும் தவிர்த்துவிடுங்கள்

உங்கள் கவிதைகளிலிருந்து.....

அனைத்தும் தோற்றுப்போய்

துவண்டிருக்கின்றன என்னவளிடம்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக