வியாழன், 25 ஏப்ரல், 2013

கூவும் குரல் வளம் (என்) அவள்.....!


கூவும் குரல் வளம் (என்) அவள்.....! 








தவற விட்டதை தடவி எடுத்து 
இண்டர்நெட்டிலே கடிதம் அனுப்பி 
செல்பேசியில் அவளை அழைத்து 
முதல் முறையாய் குரலை கேட்டு 
அசந்து பேச மறந்து இருந்து 

ஆசைகளை சொடுக்க மறந்து 
அன்பாலே பேசி முடித்து 
அவள் குரலை குறை சொல்லி 
நிறை சொல்ல வந்தேன் இங்கு.

கூவும் குரல் வளம் அவள் 
கொஞ்சும் மழலை உள்ளம் 
நகைச்சுவை பேச்சுரிமை 
சாதுர்ய நா வளம் 
அனைத்தும் உணர்ந்தேன் 
அவள் குரலில்.....!

பொடியன்(சப்பார்)

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

சித்தப்ப பித்தனின் வாழ்த்துக்கள்....!


சித்தப்ப பித்தனின் வாழ்த்துக்கள்....!
------------------------------------------------------------
 (உண்மையான பின்பம் இது)

இப்புவியில் அழகான
வெண்ணிலவின் பிறந்த நாள்
ஒவ்வொரு மாதமும் வரும்..!
ஆனால் சித்திரையில்
பிறக்கும் வெண்ணிலவுக்கோ
ஆண்டுக்கொரு முறைதான்
பிறந்தநாள் வரும்..!
அது போலே
அச்சித்திரையில் பிறந்த
(வி)சித்திர நிலவே..!
காதல் முத்திரையால்
என் அண்ணன் நித்திரையை கொள்ளையிடப்
பிறந்த என்ண்ணனின் மன்னவனே..!
நீ பிறந்த இந்நாளில்
உன்னைப் பெற்றோர்க்கு
மகிழ்ச்சியோ இல்லையோ..?
என்னை சித்தப்பனாக்கி நீ பிறந்திருக்கிறாய்
என்பதைக் கண்டு
எல்லையில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்..!
உனைக் கொஞ்சி மகிழ விரைவில் வருகிறேன்..!
இனியவன் புத்தாண்டின் புதியவன் உனக்கிந்த
சித்தப்ப பித்தனின் பிரியமான
வாழ்த்துக்கள்...!

(பொடியன் சப்பார்)

அண்ணன் மவனே வாடா...!

அண்ணன் மவனே வாடா...!

இருளைக் கிழித்துப் பிறந்த
அண்ணனின் மகனே…
வளர்பிறையில் வளரும்
என் அண்ணாவின் மகனே…
உன் வரவால்
என்னுள்ளம் துள்ளுதடா
உன்னாலென்
அண்ணன் தந்தையானான்
என்ற மகிழ்வை விட
நானுந்தன் சித்தப்பனானேன்
என்பது கண்டு மகிழ்ந்தேனடா
நீ எங்களின் குல முதல் சந்ததியடா…

உன்னால் இங்கு
உன் சித்தப்பன் உள்ளம் பூரித்து
சிரிக்கிறேன் – உவகையால்
கவிதையாய் வடிக்கிறேன்..!
எத்தனை முறை நான் 
எழுதிப் பார்த்தும்
உன்னைப் போலொரு உயிர்க்கவிதையை
வடிக்க முடியாதென
உனை வாழ்த்தி மகிழ்கிறேன்
வருக எங்களின் இளவலே...
வளர்க நீயும் புவியிலே...
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!

(பொடியன் சப்பார்)

இன்று எனதுஅண்ணன் ராஜா அண்ணி சோபி தம்பதிக்கு ஆண்மகன் பிறந்திருக்கிறது. அம்மகனின் வரவிற்க்காக இக்கவிதை.

வியாழன், 11 ஏப்ரல், 2013

குறுஞ்சி மலரோ முத்தம்...!

குறுஞ்சி மலரோ முத்தம்...!

காய்ந்து போன உதடுகளுடன்..
கவ்விப்பிடித்த நினைவுகளுடன் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
அவள் முத்தம் குறிஞ்சி மலர் ஆனதால்.....!

(பொடியன் சப்பார்)

புதன், 10 ஏப்ரல், 2013

வட்ட பொட்டுக்காரி....!

வட்ட பொட்டுக்காரி....!
----------------------------------------

கரு கரு கண்ணழகி..
வில் வித்தை புருவழகி.. 
வெண் முத்துப் பல்லழகி..
குயில் ராக குரலழகி..
கொக்கரிக்கும் (கொழி)ச்சிரிப்பழகி..
குதிரை நடையழகி..
கடுகுத்துண்டு இடையழகி..
கோவில் சிறப்பச் சிலையழகி..
இங்கும்(FB) வந்துட்டாளே ..!














சிணுங்கும் சிலையே..! 

உம்மை கண்டு 
சொக்கி மரமென 
நிற்கும் பக்த்தன்.......
(பொடியன் சப்பார்).

(இது என் நண்பி..... 
facebook ல் என்னை நண்பர்கள் பக்கத்திற்கு அழைத்தமைக்காக..!)

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

மணம் முடித்த அதே நாள்...!

() ன்பின் இமையம் என்னவள் 
(ம்) என்று சம்மதம் சொன்னவள் 
(மு) டிவுரா உறவை தந்தவள் 
அவள் கரம் பிடித்த அடுத்த 
ஆண்டில் காலடிவைக்கிறேன்... இன்று(08.04.2013).



அன்புடன்,

பொடியன்(அம்முசப்பார்)

முழுவதுமாய் ஓராண்டு...!

அன்னையின் அடுத்தவள் அக்காள்
உடன்பிறவா என் உயிரவள்... 
உடன்பிறந்தவர்கில்லாத பண்பும் 
ஈடு இணை இல்லாத அன்பும் - அவளே!

அடுத்த அன்னை என்று எண்ணியதாலோ...
என்னவோ.....?
என் ஆயுட்காலம் மற்றும் போதாது
சந்ததிக்கும் வேண்டும்.....என்று..
அவள் அன்பு மகளை கரம் பிடித்து..
இன்று அதற்கும் ஓராண்டு முடிவடைந்துள்ளது.


(அன்னை ஒருவர் தான்
இருவர் அல்ல என்று எனக்கு
உணர்த்தியதும் இந்த
ஓராண்டு தான்....)

அன்புடன்,

பொடியன்.