புதன், 23 அக்டோபர், 2013

யாரும் இல்லா உலகம்...!

யாரும் இல்லா உலகம் வேண்டும்  

                     அதில் 

நீயும் இல்லாமல் வேண்டும்..!
















பொடியன்...!

சனி, 5 அக்டோபர், 2013

பாசம் வைத்தவன் எங்கே செல்ல..!


















பகைவன் பத்தும் செய்வான் 
பழகியவன் பாவமும் செய்வான் 
படுத்தவன் துரோகமும் செய்வான் 
பாசம் வைத்த நான் என்ன செய்வேனோ..?


பொடியன்...!
_ _  இலா குடிசைக்கிளி......!


















ஒரு கிளையில் ஊசலாடி..
அதே கிளையில் அமர்ந்திருந்தேன்..

கண்டகிளிகள் காகம் பயந்து..
களம் தேடி வந்தன..

அக்கிளிகளின் பாசம் கண்டு..
அடகு வைத்தேன் என்னையே...

பாசம் கொண்ட கிளிகளெல்லாம்...
பாதியிலே சென்றன..

கேள்வி கேட்டு கேள்வி கேட்டு 
தனக்குள்ளே வருந்தினேன்..

அக்கேள்வி என்னை கேள்வி கேட்டு..
பதில் ஒன்றை சொன்னதே...!

நீ ஓர் குடிசைக்கிளி.


பொடியன்...!

அனாதையாய் இருப்பதிலும்  
அலாதி சுகம் தான்....!
------------------------------------------------------

















எதிர்பார்ப்புகளும் இல்லை...
ஏமாற்றங்களும் இல்லை...

அதே சமயம்..!
அதிக ஆனந்தமும் இல்லை...

மனதில் சுத்தமாக... 
சோகம் இல்லவே இல்லை.

அனாதையாய் இருப்பதிலும்  
அலாதி சுகம் தான்....


பொடியன்....!

சனி, 28 செப்டம்பர், 2013

அளவில்லா அனுபவம் கொண்டேன்...!


















அழைத்து பேசினேன் அழைப்பேசியில்
இரண்டே நிமிடம் தான் உறவுகளை இழந்தேன்..

ஆனால், அரைமணிக்கும் மேல் பேசிக்கொண்டே இருந்தேன் 
எங்கள் உறவு அறுபடவே இல்லை..

காரணம் அவன் உயிரற்றவன் என்பதால்..!


பொடியன்...!
 
சொர்க்கம் கண்டேன்..!

விண்ணில் இருக்கும் விண்மீன்களுக்கு
சிறிதும் குறைவில்லாத ஒளி விளக்கின் கீழ்.... 

12 வழிச்சாலையின் ஓரத்தில் ஒய்யாரமாய் 
காட்ச்சியளிக்கும் கட்டிடத்தின் மேல் அமர்ந்து...
 
அவ்வளிச்சாலையில் வந்து பொய்க்கொண்டிருக்கும் 
வாகனங்களின் இயற்கை இசையில் தன்னை மறந்து... 

பிடித்த உணவையும் 
ரசித்த மதுவையும் சுவைத்து கொண்டிருந்தேன்....
 
அடடா என்னே ஒரு சொர்க்கம் கண்டேன்.. 
இப்பூமியிலே...!


பொடியன்...!

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

எல்லாப் பெண்களும் கவிதையல்ல...!







எல்லாப் பெண்களும் கவிதையல்ல
உன்னையும் உன் கண்களையும் தவிர....!

வட்டப் போட்டுகாரியின்....பொடியன்.

சனி, 29 ஜூன், 2013


சொந்த மண்ணிலே சொர்க்கம்...!

மச்சம் கொண்டவன் 
மாமிசம் கொல்லாதவன்
மனைவியாயினும்
மாற்றம் இல்லாதவன் 
மற்றோரை வாழ்விக்க 
தன் வாழ்க்கை அழிப்பவன் 
பிறர் மானம் காக்க
மௌன மொழி பொழிந்தவன் 
தன் மானம் காக்க
தரம் கெட்டும் போகாமல் 
தரணி முழுதும் 
பவனி வந்து நிரூபிப்பான்.....
சொந்த மண்ணிலே...!


பொடியன்...!

புதன், 5 ஜூன், 2013

ஒரு பெண்ணின் கடைசி கண்ணீர்..!






















நல்லவனாய் வந்தாய்..
நண்பன் ஆனாய் 
ஒளியாய் நின்றாய் 
வழியாய் வாழ்ந்து காட்டினாய்
 
என் கரம் பிடித்து காதலும் கொண்டாய் 
வாழ்க்கையில் வழி அறியா எம்மை 
வழி அறியச்செய்தாய் என் காதலா.

வன்முறை ஏதும் இன்றி 
வாழ்வோம் என்றாய் 
நம்பினேன் ஒப்படைத்தேன் 
ஓர் இனம் நம்மை வெறுக்க 
ஓடினோம் தொலைவினில் 
வாழ்ந்தோம் நாட்களில் 

வாழ்வில் ஒன்று சேரா நம் இனம்... 
சேர்ந்தது உடனே நம்மை பிரிக்க. 
அவ்வினம் வலை விரிக்க 
நம்பி வீழ்ந்தோமே என் கணவா...

உன்னை பிரிந்த அந்நாள் முதல் 
தொலைத்தேன் என் உணவை 
கூடவே என் உறக்கத்தையும்..
உண்மைதான் கணவா உயிர் 
உள்ள பிணமாக உனைநினைத்து  
உருகி கொண்டிருக்கிறேன்..

நாம் வாழ்ந்த வாழ்க்கை 
உண்மைதான் என் மன்னவா 
நான் என்றுமே உன் அன்புக்கு 
அடிமைதான் என் மணவாளா.. 
நாம் பிரிந்தால் இறப்பேன் என்றாய் 
நாம் பிரியவிட்டால் இறப்பான் 
என்றார்களே என் இனத்தார்கள்.

என்னவன் இறப்பை காண 
என்னால் இயலாது - ஆதலால் 
கொடுத்துவிட்டேன் எமனிடம் என்னையே..!

உன் தாலி இல்லாமல் 
உயிர் வாழ இயழாமல்  
எமனோடு செல்கிறேன்.. எனை
பின்தொடராதே என் கணவா...!
இது என் மேல் ஆணை....

ஏமாற்றி விட்டேன் என்று
 
எண்ணிவிடாதே அன்புக்காதலா..
உண்மையில் இங்கு ஏமார்ந்து-
போனது இந்தப் பாவி தான்.

பொடியன்...!

செவ்வாய், 21 மே, 2013

க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே......!


க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே......!















கண்ணம் கரு
த்தவளே..!
காவேரியில் பொறந்தவளே... 
கில்லி விளையாண்டு 
கீழே விழுந்தவளே...
குற்றம் ஏதும் இல்லா 
கூரையின் கீழ் வாழ்பவளே... 
கெட்டெண்ணம் ஏதும் செய்யா 
கேடும் விளையாதவளே...
கை கால் உழைப்பை நம்பி 
கொட்டும் மழையினிலும் 
கோடி நன்மை செய்பவளே... 
கௌரவத்துடனே நீ வாழனும் நூறாண்டு.

பொடியன்.

ஞாயிறு, 19 மே, 2013

பொல்லாத பெண்ணினமே...!

பொல்லாத பெண்ணின் இனமே...!


பொட்டில்லா நெற்றியிலே 
ரத்தம் சொட்ட சொட்ட 
திலகம் இட்ட இளையவன்...

ரத்தம்(வியர்வை) சிந்தி 
அவளை காக்க ஓடாய் தேய்ந்து 
உழைத்த அவன்....

கோர விபத்தால் கோமா சென்று 
ரத்தம் இல்லா 
துடிக்கிரான்...

பொட்டு வைத்த பெண்ணவளோ 
தினம் கன்னி பையன் தேடி கூடுகிறாள்

பெற்றெடுத்தொரை காவு கொடுத்த 
கொடியவனுக்கு....
கல்லூரி நண்பர்களே 
கடவுள்கள் இப்போ.


(எனது நண்பனுக்கு சமீபத்தில் நடந்த & நடந்து கொண்டிருக்கிற உண்மை சம்பவத்தின் பாதிப்பெ இது)


செவ்வாய், 14 மே, 2013

குடும்ப இஸ்த்திரி...!


குடும்ப இஸ்த்திரி...!

குடி போதையில் கூறிவிட்டேன் 
அவள் குடும்பஸ்தி என்று...

தெளிந்ததும் கேட்டறிந்தேன் 
(காம) வெறியர்களின் சேவகி என்று....!

பொடியன்...!

சனி, 4 மே, 2013


தொடக்கம் அவள்..! முற்றும் நான்..!




அழகிய கவிதை அழைக்கிறது...!
அசிங்கம் அதை மறுக்கிறது.....
உண்மை இல்லாததால்.

பொடியன்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

கூவும் குரல் வளம் (என்) அவள்.....!


கூவும் குரல் வளம் (என்) அவள்.....! 








தவற விட்டதை தடவி எடுத்து 
இண்டர்நெட்டிலே கடிதம் அனுப்பி 
செல்பேசியில் அவளை அழைத்து 
முதல் முறையாய் குரலை கேட்டு 
அசந்து பேச மறந்து இருந்து 

ஆசைகளை சொடுக்க மறந்து 
அன்பாலே பேசி முடித்து 
அவள் குரலை குறை சொல்லி 
நிறை சொல்ல வந்தேன் இங்கு.

கூவும் குரல் வளம் அவள் 
கொஞ்சும் மழலை உள்ளம் 
நகைச்சுவை பேச்சுரிமை 
சாதுர்ய நா வளம் 
அனைத்தும் உணர்ந்தேன் 
அவள் குரலில்.....!

பொடியன்(சப்பார்)

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

சித்தப்ப பித்தனின் வாழ்த்துக்கள்....!


சித்தப்ப பித்தனின் வாழ்த்துக்கள்....!
------------------------------------------------------------
 (உண்மையான பின்பம் இது)

இப்புவியில் அழகான
வெண்ணிலவின் பிறந்த நாள்
ஒவ்வொரு மாதமும் வரும்..!
ஆனால் சித்திரையில்
பிறக்கும் வெண்ணிலவுக்கோ
ஆண்டுக்கொரு முறைதான்
பிறந்தநாள் வரும்..!
அது போலே
அச்சித்திரையில் பிறந்த
(வி)சித்திர நிலவே..!
காதல் முத்திரையால்
என் அண்ணன் நித்திரையை கொள்ளையிடப்
பிறந்த என்ண்ணனின் மன்னவனே..!
நீ பிறந்த இந்நாளில்
உன்னைப் பெற்றோர்க்கு
மகிழ்ச்சியோ இல்லையோ..?
என்னை சித்தப்பனாக்கி நீ பிறந்திருக்கிறாய்
என்பதைக் கண்டு
எல்லையில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்..!
உனைக் கொஞ்சி மகிழ விரைவில் வருகிறேன்..!
இனியவன் புத்தாண்டின் புதியவன் உனக்கிந்த
சித்தப்ப பித்தனின் பிரியமான
வாழ்த்துக்கள்...!

(பொடியன் சப்பார்)

அண்ணன் மவனே வாடா...!

அண்ணன் மவனே வாடா...!

இருளைக் கிழித்துப் பிறந்த
அண்ணனின் மகனே…
வளர்பிறையில் வளரும்
என் அண்ணாவின் மகனே…
உன் வரவால்
என்னுள்ளம் துள்ளுதடா
உன்னாலென்
அண்ணன் தந்தையானான்
என்ற மகிழ்வை விட
நானுந்தன் சித்தப்பனானேன்
என்பது கண்டு மகிழ்ந்தேனடா
நீ எங்களின் குல முதல் சந்ததியடா…

உன்னால் இங்கு
உன் சித்தப்பன் உள்ளம் பூரித்து
சிரிக்கிறேன் – உவகையால்
கவிதையாய் வடிக்கிறேன்..!
எத்தனை முறை நான் 
எழுதிப் பார்த்தும்
உன்னைப் போலொரு உயிர்க்கவிதையை
வடிக்க முடியாதென
உனை வாழ்த்தி மகிழ்கிறேன்
வருக எங்களின் இளவலே...
வளர்க நீயும் புவியிலே...
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!

(பொடியன் சப்பார்)

இன்று எனதுஅண்ணன் ராஜா அண்ணி சோபி தம்பதிக்கு ஆண்மகன் பிறந்திருக்கிறது. அம்மகனின் வரவிற்க்காக இக்கவிதை.

வியாழன், 11 ஏப்ரல், 2013

குறுஞ்சி மலரோ முத்தம்...!

குறுஞ்சி மலரோ முத்தம்...!

காய்ந்து போன உதடுகளுடன்..
கவ்விப்பிடித்த நினைவுகளுடன் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
அவள் முத்தம் குறிஞ்சி மலர் ஆனதால்.....!

(பொடியன் சப்பார்)

புதன், 10 ஏப்ரல், 2013

வட்ட பொட்டுக்காரி....!

வட்ட பொட்டுக்காரி....!
----------------------------------------

கரு கரு கண்ணழகி..
வில் வித்தை புருவழகி.. 
வெண் முத்துப் பல்லழகி..
குயில் ராக குரலழகி..
கொக்கரிக்கும் (கொழி)ச்சிரிப்பழகி..
குதிரை நடையழகி..
கடுகுத்துண்டு இடையழகி..
கோவில் சிறப்பச் சிலையழகி..
இங்கும்(FB) வந்துட்டாளே ..!














சிணுங்கும் சிலையே..! 

உம்மை கண்டு 
சொக்கி மரமென 
நிற்கும் பக்த்தன்.......
(பொடியன் சப்பார்).

(இது என் நண்பி..... 
facebook ல் என்னை நண்பர்கள் பக்கத்திற்கு அழைத்தமைக்காக..!)

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

மணம் முடித்த அதே நாள்...!

() ன்பின் இமையம் என்னவள் 
(ம்) என்று சம்மதம் சொன்னவள் 
(மு) டிவுரா உறவை தந்தவள் 
அவள் கரம் பிடித்த அடுத்த 
ஆண்டில் காலடிவைக்கிறேன்... இன்று(08.04.2013).



அன்புடன்,

பொடியன்(அம்முசப்பார்)

முழுவதுமாய் ஓராண்டு...!

அன்னையின் அடுத்தவள் அக்காள்
உடன்பிறவா என் உயிரவள்... 
உடன்பிறந்தவர்கில்லாத பண்பும் 
ஈடு இணை இல்லாத அன்பும் - அவளே!

அடுத்த அன்னை என்று எண்ணியதாலோ...
என்னவோ.....?
என் ஆயுட்காலம் மற்றும் போதாது
சந்ததிக்கும் வேண்டும்.....என்று..
அவள் அன்பு மகளை கரம் பிடித்து..
இன்று அதற்கும் ஓராண்டு முடிவடைந்துள்ளது.


(அன்னை ஒருவர் தான்
இருவர் அல்ல என்று எனக்கு
உணர்த்தியதும் இந்த
ஓராண்டு தான்....)

அன்புடன்,

பொடியன்.

சனி, 30 மார்ச், 2013

கடைத்தெருவில் அனாதைகள்...!




அனாதைகள் என்று எவரும் 
படைப்பதும் இல்லை 
பிறப்பதும் இல்லை.. 

அவர்கள் படைத்தவனாழும் 
பிறப்புரிமை கொடுத்தவர்களாலும் 
கைவிடப்பட்டோர்..... 

பெற்றெடுக்க யோசிக்காத பெற்றோர் 
வளர்க்கவா யோசிக்க போகிறார்கள்...


அன்புடன்,

பொடியன்(சப்பார்)

செவ்வாய், 26 மார்ச், 2013

இதயம் வலிக்கிறது...!


இதயம் வலிக்கிறது...!



அவள் அமுத முகம் கண்டு....
அமைதியாய் போகிறேன்.
அவளை அவளின் 
புதியவனுடன் கண்டபிறகும்....

பொடியன்...

திங்கள், 11 மார்ச், 2013

இன்றைய ஏமாற்றம்...!


இன்றைய  ஏமாற்றம்...!

அதிகாலை அரவணைப்பாய்யென்று  
ஆசையுடன் அழைந்திரிந்தேன் 
அந்திமாலை ஆகும்வரை 
அன்பு மழை இல்லையென்று 
ஆராநெஞ்சுடன் 
அழியாபாசம் கொண்டு 
அமர்ந்திருக்கிறேன் அறையினுள்..!

அன்புடன்,

பொடியன்(சப்பார்)

அந்நிய தேசத்தில் அனாதையாய்..!


அந்நிய தேசத்தில் அனாதையாய்..!

அனைத்தும் கிடைத்தும் 
அனைவரும் இருந்தும் 
அனாதையாய் 
அரபு நாட்டில். 

அன்புடன்,

அப்துல் சப்பார்.