வெள்ளி, 28 மே, 2010

உன் மயக்கம்...!

உன் அதர வாய் திறந்து
அன்பாய் என்னை
நீயும் அழைக்கும் போது…
என் உயிரும் உருகி வழிகிறது...
உனக்குள் புதைய நினைக்கிறது..!
செல்லமாய் நீ எனை அடித்து
விளையாடும் போது...
என் கரமோ
உன்னை அணைக்கத் துடிக்கிறது...
உன் கன்னத்தைக்
கிள்ள நினைக்கிறது..!
குறும்பாய் நீயும் சிரித்திடும் போது...
உன் கன்னக்குழியின்
அழகைப் பார்த்து
என் உள்ளமும்
மகிழ்ச்சியில் விரிகிறது...
உன்னோடு ஊடல்
கொள்ள விழைகிறது..!
உன் வெட்கச் சிவப்பை
பார்த்தத்திலிருந்து...
அடிக்கடி உனை வெட்கப்பட
வைக்கத் தோணுகிறது...
உன் வெட்கத்தில்
திளைக்கத் தோணுகிறது..!
போதும் பெண்ணே உன் மயக்கம்...
எனை ஏற்றுக் கொள்வதில்
ஏன் தயக்கம்..?