சனி, 30 மார்ச், 2013

கடைத்தெருவில் அனாதைகள்...!




அனாதைகள் என்று எவரும் 
படைப்பதும் இல்லை 
பிறப்பதும் இல்லை.. 

அவர்கள் படைத்தவனாழும் 
பிறப்புரிமை கொடுத்தவர்களாலும் 
கைவிடப்பட்டோர்..... 

பெற்றெடுக்க யோசிக்காத பெற்றோர் 
வளர்க்கவா யோசிக்க போகிறார்கள்...


அன்புடன்,

பொடியன்(சப்பார்)

செவ்வாய், 26 மார்ச், 2013

இதயம் வலிக்கிறது...!


இதயம் வலிக்கிறது...!



அவள் அமுத முகம் கண்டு....
அமைதியாய் போகிறேன்.
அவளை அவளின் 
புதியவனுடன் கண்டபிறகும்....

பொடியன்...

திங்கள், 11 மார்ச், 2013

இன்றைய ஏமாற்றம்...!


இன்றைய  ஏமாற்றம்...!

அதிகாலை அரவணைப்பாய்யென்று  
ஆசையுடன் அழைந்திரிந்தேன் 
அந்திமாலை ஆகும்வரை 
அன்பு மழை இல்லையென்று 
ஆராநெஞ்சுடன் 
அழியாபாசம் கொண்டு 
அமர்ந்திருக்கிறேன் அறையினுள்..!

அன்புடன்,

பொடியன்(சப்பார்)

அந்நிய தேசத்தில் அனாதையாய்..!


அந்நிய தேசத்தில் அனாதையாய்..!

அனைத்தும் கிடைத்தும் 
அனைவரும் இருந்தும் 
அனாதையாய் 
அரபு நாட்டில். 

அன்புடன்,

அப்துல் சப்பார்.