ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

காதல் வந்தது...!

நான்


உன்னைப் பார்த்து

புன்னகைத்த போதெல்லாம்

நீ

என்னைப் பார்த்ததேயில்லை

யாரோ ஒருத்தி

என்னைப் பார்த்து

புன்னகைக்க

நீ அவளைப் பார்த்து

முறைத்த போதே

புரிந்தேன்

என் மீது உனக்கு

காதல் வந்ததை...!!!