வியாழன், 23 டிசம்பர், 2010

உன் விரல் தீண்டலில்...!

உன் விரல் தீண்டலால்

உயிரற்று எழுத்துக்கள் கூட
என் கண் முன்னே
உயிர்பெற்று நிற்கிறது...
என் அலை பேசியில்
நீ அனுப்பிய குறுந்தகவலாக..!

செவ்வாய், 2 நவம்பர், 2010

அவனும் நீங்களும்...!!

அவனை எல்லோரும்
கல்லால் அடித்துக் கொன்றார்கள்
கடைசியாக
தூக்கிப் புதைக்க
அருகில் வந்தபோது
கொஞ்சம் உயிர் இருந்தது

அவன் கண்களால் சொன்னான்
இன்னும் ஒரு
கல் தேவை

By,
Ananthi

மிச்ச நேரம்.!!

பேஸ்புக்
ட்விட்டர்
வலைப்பக்கம்
இன்னபிற
இணைய தளங்களைத்
தாண்டி
மிஞ்சும் நேரம் கைப்பற்றி
அறை சிறையிலிருந்து
விடுபட்டு
காலாற நடந்து போய்
பார்த்து வர வேண்டும்
பனி பூத்த
புற்களையும்
நேசம் கலந்த
முகங்களையும்

வெள்ளி, 29 அக்டோபர், 2010

மேகங்களின் மின்னல் பூக்களோ..!

மழைத்துளியின்


சாரல் பூக்கள்...

மழலையின்

சிரிப்பைக் காட்டுகிறது..!

மேகங்களின்

மின்னல் பூக்களோ

உன் சிரிப்பைக் காட்டுகிறது..!

சாரல் பூக்களை ரசித்தால்

என் துக்கத்திற்கு ஆபத்து

என்பதைக் கண்டேன்..!

மின்னலை ரசித்தால்

அது என் கண்ணுக்கு

ஆபத்து என்பதை

உனைக் கண்டதும்(தான்)

கண்டு கொண்டேன்..!

திங்கள், 25 அக்டோபர், 2010

என்ன நோயடி இது....?

எங்கு திரும்பினாலும்
எதிரில் நீயாகவே தெரிகிறாய்..!
யாருடன் பேசினாலும்
எதிரில் நீ பேசுவதாகவே தெரிகிறாய்..!
நான் எங்கு சென்றாலும்
நிழல் போல் என்னுடன்
நீயும் வருவதாகவே தெரிகிறாய்..!
என்ன நோயடி இது..?
உலகமே மறந்து போய்
உன் நினைவுகள் மட்டுமே
எனக்கு உலகமாகி இருக்கிறது..!

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

சனி, 23 அக்டோபர், 2010

வள்ளலிடம் கஞ்சத்தனம்...!

உன் செவ்விதழ் திறந்து பேசுவதில்…
நீ வள்ளல் என்பதை
ஒத்துக் கொள்கிறேன்..!
அதே வேளையில்
உன் செவ்விதழ்களை மூடி
எனக்கொரு முத்தமிடு…
என்றால் மட்டும்
கொடுக்க மாட்டேன் என
கஞ்சத் தனம் செய்கிறாயே அது ஏன்?
வள்ளலிடம் கஞ்சத்தனம்
கூடாது பெண்ணே..!
நீ வள்ளலாய் இருந்தால்தான்
இந்த வறியவனுக்கு வாழக்கையே..!

செவ்வாய், 19 அக்டோபர், 2010

நீ இல்லாவிட்டால்...!

உன் அருகாமை…


என்னை மலர வைக்கிறது..!

உன் கொஞ்சல்…

என்னை உளற வைக்கிறது..!

உன் பார்வை…

என்னை கிறங்க வைக்கிறது..!

உன் புன்னகை…

என்னை மயங்க வைக்கிறது..!

உன் தீண்டல்

என்னை உறைய வைக்கிறது..!

மொத்தத்தில்

நீ இல்லாவிட்டால்

என் இதயம் இயங்க மறுக்கிறது..!

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

காதல் வந்தது...!

நான்


உன்னைப் பார்த்து

புன்னகைத்த போதெல்லாம்

நீ

என்னைப் பார்த்ததேயில்லை

யாரோ ஒருத்தி

என்னைப் பார்த்து

புன்னகைக்க

நீ அவளைப் பார்த்து

முறைத்த போதே

புரிந்தேன்

என் மீது உனக்கு

காதல் வந்ததை...!!!

வெள்ளி, 28 மே, 2010

உன் மயக்கம்...!

உன் அதர வாய் திறந்து
அன்பாய் என்னை
நீயும் அழைக்கும் போது…
என் உயிரும் உருகி வழிகிறது...
உனக்குள் புதைய நினைக்கிறது..!
செல்லமாய் நீ எனை அடித்து
விளையாடும் போது...
என் கரமோ
உன்னை அணைக்கத் துடிக்கிறது...
உன் கன்னத்தைக்
கிள்ள நினைக்கிறது..!
குறும்பாய் நீயும் சிரித்திடும் போது...
உன் கன்னக்குழியின்
அழகைப் பார்த்து
என் உள்ளமும்
மகிழ்ச்சியில் விரிகிறது...
உன்னோடு ஊடல்
கொள்ள விழைகிறது..!
உன் வெட்கச் சிவப்பை
பார்த்தத்திலிருந்து...
அடிக்கடி உனை வெட்கப்பட
வைக்கத் தோணுகிறது...
உன் வெட்கத்தில்
திளைக்கத் தோணுகிறது..!
போதும் பெண்ணே உன் மயக்கம்...
எனை ஏற்றுக் கொள்வதில்
ஏன் தயக்கம்..?

வியாழன், 1 ஏப்ரல், 2010

பெரிதாக ஒன்றும் சொன்னதில்லை

பெரிதாக ஒன்றும்

சொன்னதில்லை
கவிதையில்
ஆனாலும்
கவிதைகள் எப்போதும்
என்னைப் பார்த்ததில்லை
சிறுமையாய்

செவ்வாய், 30 மார்ச், 2010

புயலென்று சொன்னாலும்..!

புயலென்று சொன்னாலும்
நீயென்று சொன்னாலும்
இரண்டும் ஓன்றுதான்..!
'தென்றலல்ல அவள்' என்று
உன்னைப் பற்றி
உன் உறவுகள் சொல்லக்
கேட்டிருக்கிறேன்..!
அப்ப்போதெல்லாம் அதை
நம்பாத நான்
உனை நேரில் சந்தித்த பின்
நம்பத் தொடங்கினேன்..!
நீ வெறும் புயலல்ல..?
பேரழகுப் புயலென்று..!

திங்கள், 29 மார்ச், 2010

உன் மௌனப் புன்னகைக்கு முன்...!

பேசா மடந்தையாகி விட்ட
உன்னைப் பேச வைக்க
உன்னிடம் என்னென்னவோ பேசுகிறேன்…
பதிலுக்கு நீ மௌனத்தை
பரிசாகத் தருகிறாய்…
உனை என்னிடம் பேச வைக்க
பகீரதப் பிரயத்தனங்களை
செய்து பார்க்கிறேன்…
பதிலுக்கு உன் மௌனப் புன்னகையை
பரிசாகத் தருகிறாய்..!
அந்த மௌனப் புன்னகைக்கு முன்
என் அத்துனை முயற்சிகளும்
ஆயுள் இழந்து விட்டன என்பதை
பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறேன்..!
இப்போதாவது பேசு..!

ஞாயிறு, 28 மார்ச், 2010

நீ என்னிடம் வரும் நாள்..?

எதற்க்கெடுத்தாலும்
விரல் விட்டு எண்ணும்
சிறு குழந்தையைப் போல…
அனு தினமும் - உன்
அடியவனும் விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருக்கிறேன்…
நீ என்னிடம் வரும் நாள்
எப்போது வரும்
என்பதற்காக..?
அலுமினியப் பறவையில்
பறந்து சென்ற
அன்னப் பறவையே…
உனக்கென கவி விடு தூது அனுப்புகிறேன்..
காற்றாய் விரைந்து வந்து விடு...
என்னுள் கவி மூச்சுக் காற்றாய் கலந்து விடு..!

என் காதலை எப்படியும்..!

ஆளரவமற்ற பாலைவனத்தில்
அனாதையாய் உனைத்
தேடுகின்றேன்..!
நீ போன வழியினைத்
தேடித் தேடி
ஓடாய்த் தேய்ந்தபடி
உனைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்..!
ஒவ்வொரு நாள்
சூரியன் உதிக்கும் போதெல்லாம்
என் காதலை எப்படியும்
கண்டு பிடித்துவிடுவேன்
என்ற நம்பிக்கையை மட்டும்
தேய்த்து விடாமல்..!

புதன், 24 மார்ச், 2010

ஒரே ஒரு மௌனப் புன்னகை..!

என் அமைதியான மனதை…
கொஞ்சிக் குலுங்கும்
உன் கொலுசொலிகள்
குலைக்கவில்லை..!
கொஞ்சிப் பேசும்
உன் கை வளையல்கள்
குலைக்கவில்லை..!
ஆனால் நீ உதிர்த்த
ஒரே ஒரு மௌனப் புன்னகை
என் மனதைக் குலைத்து விட்டதடி..!
இப்போதேனும் ஒத்துக் கொள்..!
உன் மௌனப் புன்னகைக்கும்
வலிமை உண்டென்று..!

சட்டென்று முத்தமிட்டு..!

அடங்காமல் திரிந்து
கொண்டிருந்த என்னை…
சட்டென்று முத்தமிட்டு
சாந்தமானவனாய்
மாற்றிவிட்டாய்..!
அந்த முத்தத்தினால்
என் சித்தம் மாறியது மட்டுமின்றி
காதல் பித்தம் ஏறியபடி
மொத்தமாய் உனக்காகிப் போனேன்...
மெழுகாய் உருமாறிப் போனேன்..!

திங்கள், 22 மார்ச், 2010

இதோ... இந்நொடியிலிருந்து..!

என் பாதை
கரடு முரடானது என்று
தெரிந்த பின்னும்...
எனை அறியாமல்
என் சுவடைப்
பின் தொடருகிறாய்..!
என் பேச்சு
சற்று நாகரீகமற்றது எனத்
தெரிந்த பின்னும்...
எனை அறியாமல்
என் பேச்சை
நாகரீகப்படுத்துகிறாய்..!
என கொள்கைகள்
உனக்குப் பொருந்தாது என்று
தெரிந்த பின்னும்...
எனை அறியாமல்
என் கொள்கைகளைப்
பின்பற்றுகிறாய்..!
இத்தனையும் எனை
அறியாமல்
செய்தவளே..!
உன் அன்பை இப்போதுதான்
கண்டுகொண்டேன்..!
இதோ... இந்நொடியிலிருந்து
நான் உனக்கானவனாக
மாறி விட்டேன்..!

ஞாயிறு, 21 மார்ச், 2010

உன்னை கண்ட பின்புதான்..!

எப்படித்தான் என்னுள் உற்சாகம்
ஊற்றெடுக்கிறது
என்பது தெரியாமல்
தினமும் தவித்துக் கொண்டிருந்தேன்..!
உன்னை கண்ட பின்புதான்
தெரிந்து கொண்டேன்…
உற்சாகம் உன்னால்
ஊற்றெடுக்கிறதென்று..!

நாவிற்கு ஏது பேச்சு..?

தலை இருக்கும் போது
வால் ஆடக்கூடாது என்பார்கள்…
அது உண்மைதான் பெண்ணே..!
நம் கண்களிரண்டும்
காதலோடு பேசிக்
கொண்டிருக்கும் போது
நாவிற்கு ஏது பேச்சு..?
அவைகள் சற்று
அடங்கியே இருக்கட்டும்..!

வெள்ளி, 19 மார்ச், 2010

என் தமிழின் மூன்றினமும்..!

நீ சேலை கட்டியிருந்தபோது
உன்னுடைய அழகான
இடையினத்தைக் கண்டு ரசித்தேன்..!
அதைக் கண்ட நீயோ
சட்டென்று உன் இடையினத்தை
மறைத்தது மட்டுமின்றி
உன் இயல்பான மெல்லினத்தையும்
மறைத்து விட்டு
வல்லினத்தைக் காட்டுகிறாய்..!
இப்படி என் தமிழின்
மூன்றினமும் உன்னிடம்
மொத்தமாய் இருக்கும் போது
ஓரினத்தை மட்டும்
நான் பார்த்து ரசித்தது
தவறுதான் பெண்ணே..!

புதன், 17 மார்ச், 2010

உன் அருகாமைச் சுகத்தில்..!

எனைப் பார்த்தும்
பார்க்காமல் போனது ஏன்..?
என்னிடம் பேச நினைத்தும்
பேசாமல் போனதேன்..?
என அத்தனையும் உனைப் பார்த்ததும்
கேட்க வேண்டுமென நினைப்பேன்..!
உனைப் பார்த்த வினாடியில்
அத்தனையும் மறந்தபடி
உன் அருகாமைச் சுகத்தில்
அசைவற்றுப் போய் விடுகிறேன்…

திங்கள், 15 மார்ச், 2010

உன் மடி மீது தலை சாய..!

உன் மடி மீது தலை சாய
ஆசைப்பட்ட எனக்கு…
உன் நெஞ்சணையில்
எனைச் சாய்த்து
வள்ளல் எனக் காட்டி விட்டாய்..!
என் மீசைதனை பிடித்திழுத்து
உன் குறும்புகளை
அவிழ்த்து விட்டாய்..!
இதை அத்தனையும்
ஆனந்தமாய் என்
அடி மனதில் சேமிக்கிறேன்..!
நீ என்னருகே இல்லாத
தருணங்களில்
மீட்டெடுத்துப் பார்ப்பதற்கு..!

புதன், 10 மார்ச், 2010

அதிகாலையில்..!

அதிகாலையில் கூவும் குயிலாய்
உன் மயக்கும் குரல்..!
அதிகாலையில் உதிக்கும் சூரியனாய்
உன் மஞ்சள் முகம்..!
அதிகாலையில் எழுப்பும் அன்னையாய்
உன் அன்பு எழுப்பல்..!
அதிகாலையில் மலரும் மல்லிகையாய்
உன் அழகிய புன்னகை..!
இந்த சுகங்களத்தனையும்
அதிகாலையிலேயே எனக்கு
கிட்டுமென்றால்...
என் காலம் முழுதும் எனக்கு
அதிகாலையாகவே இருக்கட்டும்..!
என்னவளின் அழகு தரிசனம்
எனை அனுதினமும் அள்ளித் தின்னட்டும்..!

செவ்வாய், 9 மார்ச், 2010

உன் பெயருடன்...!

என் பெயரை தனியே
எழுதிப் பார்ப்பதை விட
உன் பெயருடன்
சேர்த்து எழுதுவதைத்தான்
என் பேனாவும் விரும்புகிறது...
அதுவும் என்னைப் போலவே..!

திங்கள், 8 மார்ச், 2010

அன்பை உலகிற்கு அளிக்கும்..!

இம்மண்ணை தாய் மண்ணென்றழைத்த
நம் முன்னோர்க்கு வணக்கம்..!
தங்கத் தமிழை தாய்த்தமிழ்
என்றழைத்த தமிழனுக்கு
என் தலைவணக்கம்..!
இம்மண்ணிற்கு எனை
ஈன்றளித்த என்
அன்னைக்கு வணக்கம்..!
என் கண்ணிற்குள் நுழைந்து
கவிதையாய் மாறிய
என் காதலிக்கு வணக்கம்..!
என்றன் வாழ்வினையாய் மாறி
என்னுள் வாழ்கின்ற
துணைவிக்கு வணக்கம்..!
அன்பினைப் பொழியும் என்
அன்பு மகளுக்கு வணக்கம்..!
அன்பை உலகிற்கு அளிக்கும்
அகிலத்து மகளிர்க்கு வணக்கம்..!
-----
அன்பில்லா வாழ்க்கையும் பாழ்
அன்னையில்லா அண்டமும் பாழ்..!
மண்ணில்லா மரமும் பாழ்
பெண்ணில்லா உறவும் பாழ்..!
உயிரற்ற இவ்வுடலும் பாழ்
பெண்ணற்ற ஆணும் பாழ்..!
-----
என்னை இம்மண்ணில் உலவ விட்ட என் அன்னைக்கும், எனை நேசிக்கும் என் பெண் கவிதைக்கும், என் தோழிகளுக்கும், நாங்கள் ரசிக்கும் எங்களின் பெண் மகள்கள் உள்ளிட்ட அனைத்து உலக மகளிருக்கும் இச்சிறுவனின் இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

வாழ்க நம் பெண்குலம்..!

புதன், 3 மார்ச், 2010

ஒரு முறைதான் அமாவாசை...!

இப்பூமியில் மாதத்திற்கு

ஒரு முறைதான்
அமாவாசை வரும்..!
ஆனால் எனக்கோ..?
அவள் என்னருகே இல்லாத
இந்த மாதம் முழுதும்
அமாவாசைதான்..!
என் வெள்ளி நிலவு என்று வரும்
என்ற ஏக்கத்தோடு நான்..?
அதோடு என் காதலும்..!
என் உறங்கா விழிகளும்..!

செவ்வாய், 2 மார்ச், 2010

அழகற்ற பொருள் கூட..?

உன் கண்ணழகை
ரசிப்பதற்கே
எனக்கு நேரம் போதவில்லை..!
இதில் உன் ஆடையழகைப் பற்றி
என்னிடம் கேட்டால்
நான் என்னென்று சொல்ல..?
பெண்ணழகே…
அழகற்ற பொருள் கூட
உன்னோடு சேர்ந்தால்
அத்தனையும் அழகாகி விடும்…
நானும் அழகாகியதைப் போல்..!

திங்கள், 1 மார்ச், 2010

என் விடியல் உனக்காக....

முப்பது நாள் கழித்துதான்
எனக்கு உன் முழுமதி நிலவு
முகத்தரிசனம் கிடைக்குமென்கிறாய்..!
நிலவின்றி இரவிற்கேது வெளிச்சம்..?
நீயின்றி என் மனதிற்கேது வெளிச்சம்..?
விரைவில் என்னிடம் வந்து விடு…
என் விடியல் உனக்காக காத்திருக்கிறது..!

உன் சுமையை நான்...1

என் தோள் மீது சாய்ந்தது

மலரா..? இல்லை மலர்க்கொத்தா..?
உன் சுமையை நான்
சுகமாய்ச் சுமக்க
நீ லேசாகிப் போனாய்…
உன்னோடு சேர்ந்து நானும்..!

(என்னவள் துன்பத்தில் துவளும் போதெல்லாம்... என் தோள் மீது சாய்ந்து கொள்வாள்... அதை இங்கே கவிதையாக...)

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

உன்னோடு என் இதயத்தையும்..!

ஒரு மாதம் எனைப் பார்க்க முடியாது
என்ற காரணத்தால்
எனைப் பிரிய மனமின்றி
உன்னோடு என் இதயத்தையும்
கொண்டு செல்கிறாய்..!
நானோ உன் நினைவுகளை
சுமந்தபடி நாட்களுடன்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்..!
அந்நாட்களை வென்று விட்டால்
நீ என்னருகே வரும் நாள்
வந்து விடும் என்பதற்காக..!

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

ஒவ்வொரு வினாடியும்...!

பெண்ணே..!
வசந்த காலத்திற்காக காத்திருக்கும்
வாழ்க்கை போல
உன் வருகைக்காக காத்துக்
கொண்டிருக்கிறேன்..!
ஒவ்வொரு வினாடியும்
ஒவ்வொரு யுகமாகத்
தோன்றுகிறது எனக்கு..!
விரைந்து வா அன்பே..?
அந்த யுகங்களை உன்னுடன்
சேர்ந்து களிக்க வேண்டும்..!

புதன், 24 பிப்ரவரி, 2010

அடிக்கடி நீ எனை..?

வண்ண மயிலிறகின் மேனியடி - நீ
இம்மன்னவனின் தேவியடி..!
பொன் பஞ்சு நெஞ்சமடி - உன்
கண் பேச்சு காந்தமடி..!
குறுநகை கன்னமடி - உன்
புன்னகை பூப்பந்தலடி..!
அன்ன மயில் அழகு நடையடி - உன்
அன்பிற்கிவன் அடிமையடி..!
முயல் போன்ற அழகு முகமடி - உன்
முகில் கூந்தல் கார்மேகமடி..!
உயிர் கொடுத்தோர் பெற்றோரடி - என்
உயிர் வாழ அர்த்தம் கொடுத்தவள் நீயடி..!
முழு நிலவே என் மனதில் நீதானடி - முன்
பனி மலரே உன் மனதில் நான்தானடி..!
போதாது... போதாது உன் குறும்புகளடி - நீ எனை
அடிக்கடி அடித்தணைக்க வேண்டுமடி..!

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

உயிரே… உம் என்று சொல்..!

உயிரே… உம் என்று சொல்
மணலை மலையாக்குகிறேன்
மடுவை கடலாக்குகிறேன்
கடலை குளமாக்குகிறேன் என்றெல்லாம்
பொய்யுரைக்க விரும்பவில்லை..
நீ என் காதலியானால்...
உன்னுள் நானிருப்பேன்..!
உனக்காகவே வாழ்ந்திருப்பேன்..!
உன் உயிரோடு கலந்திருப்பேன்..!
என் சொல்கிறாய் என்னன்பே..!

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

அதுவரை என்னுள்ளேயே..!

என் அன்பின் அன்பே..!
உனை என் மனதில்
ஆழமாகப் பதித்து விட்டேன்..!
அழகே நீ பதறாதே..?
பத்திரமாய்... பவித்திரமாய்
நீ என்னுள்ளே கலந்திருப்பாய்..!
அந்த இன்பத்தில்
நான் களித்திருப்பேன்..!
காலம் வந்ததும்
உனைக் கரம் பிடிப்பேன்..!
அதுவரை என்னுள்ளேயே வசித்திடு..!

வியாழன், 18 பிப்ரவரி, 2010

எனை விட்டுச் செல்லாதே…!

நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

உன்னை நினைத்தாலே போதும்..!

உன்னை நினைத்தாலே போதும்
என் பேனாவிற்கு…
உடனே அது காகிதத்தை
முத்தமிடத் தொடங்குகிறது..!
உனைப் பற்றி
கவிதையாய் வடிப்பதற்கு..!
உன்னை நான் நேரில்
சந்தித்தால் போதும்…
உடனே உன் செவ்விதழில்
முத்தமிடத் தோன்றுகிறது…
உன்னைப் போன்றதொரு
அழகான கவிதையைப் படைப்பதற்கு..!

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

முழு நிலவு உதிக்குமா...!

அதிகாலையில்
முழு நிலவு உதிக்குமா?
என்று என்னிடம் கேட்டார்கள்...
உதிக்குமென்றேன்..!
'போடா நீ பொய் சொல்கிறாய்..'
என்றார்கள்..!
அதி காலையில்
உன் முழு நிலவு முகத்தைப்
பார்த்த பின்னும்...
பார்க்கவில்லை என்று
என்னால் பொய்யுரைக்க
முடியவில்லையடி அன்பே..!

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...??

என் கண்ணில் மலர்ந்து

என்னுள் நுழைந்து
என்னவளாய் ஆனவளே..!
என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!
ஒவ்வொரு கணமும்
உன்னைத்தானடி
தேடிக் கொண்டிருக்கிறேன்..?
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்..?
உனக்காக இங்கொருவன்
பிறப்பெடுத்திருக்கிறான்
என்பதை அறியாமல்
இத்தனை நாளாய்
நீ எங்கிருந்தாய்..?

புதன், 10 பிப்ரவரி, 2010

இவள் அழகிற்கு...!

இந்த ரோஜா ஏனடா
இவ்வளவு சிவப்பாக இருக்கிறது
என்று என்னிடம் கேட்கிறாய்..?
அடி அசட்டுப் பெண்ணே
உனைக் கண்ட ரோஜா மலர்
இவள் அழகிற்கு
நான் ஈடில்லையே
என்று வெட்கப்பட்டு
நிற்பதால் வந்த சிவப்படி..!

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஆசைகள் அடிபணியுமா..?

உன் கார்மேகக் கூந்தலின்
வாசம் பிடித்து வானில் நடக்க ஆசை..!
உன் வெண்டை
விரல்களைக் களைந்து
விளையாட ஆசை..!
உன் தண்டைக் கால்களில்
கொலுசாய் மாறி
கலகலவென ஒலிக்க ஆசை ..!
உன் கெண்டை விழிகளின்
இமையாய் மாறி
உன்னை கண்ணடிக்க ஆசை..!
ஆசைகள் அன்புக்கு அடிபணியுமா..?
அன்புக்கு ஆசைகள் அடி பணியுமா..?
பெண்ணழகே பதில் சொல்..!

சனி, 6 பிப்ரவரி, 2010

உன் கட்சிதானடி..!

என் வீட்டுக் கண்ணாடி கூட

உன் கட்சிதானடி..!
என்னைக்
காட்டச் சொன்னால்
அது உன்னைக்
காட்டுகிறது பார்..!

வியாழன், 4 பிப்ரவரி, 2010

என்ன மேதாவித்தனம் இது...!

வெண்முத்துப் பற்களை
வைத்துக் கொண்டு
பொன் முத்து வாங்க
வாங்க வருகிறாயே..!
என்ன மேதாவித் தனம் இது..?
நீயோ முத்துச் சிரிப்பை
உதிர்த்து விட்டாய்..!
நானோ…
உன்னிடமிருந்து
சிதறிய முத்துக்களை
என் மனதிற்குள்
கோர்த்துக் கொண்டிருக்கிறேன்..!

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

திட்ட வேண்டும் என்பதற்காகவே..!

நீ எனைத் திட்ட வேண்டும் என்பதற்காகவே உன்னிடம்
சிறு சிறு குறும்புகள்
செய்கிறேன்..!
அதைப் பார்த்த நீயோ
எனைக் கடுமையாகத் திட்டாமல்
மறைமுகமாகச் சுட்டுகிறாய்...
மறுபடியும் அதே குறும்பை
செல்லமாய்ச் செய்யடா என்று..!

திங்கள், 1 பிப்ரவரி, 2010

காதலெனும் கடிகாரத்தில்...!

காதலெனும் கடிகாரத்தில்
மணி முள்ளாய் நீ..!
நிமிட முள்ளாய் நான்..!
நொடி முள்ளாய் நம் காதல்..!
நொடி முள்ளின்றி
நிமிட முள் ஓடாது..!
நிமிட முள்ளின்றி
மணி முள் ஓடாது..!
அது போலத்தான் அன்பே
நம்முடைய காதலும்..!

வெள்ளி, 29 ஜனவரி, 2010

காதல் போதை..!!

உன் திருவாய் மலர்ந்து என்னிடம் நீ
ஒரு வார்த்தை பேசியதற்கே
நான் வானத்தில் மிதக்கிறேன்
என்றால்..?
நீ தினமும் என்னிடம் பேசினால்
நான் வானத்திலேயேதான் குடியிருப்பேன்..!
ஓ… இதுதான் 'காதல் போதை' என்பதா..?

வியாழன், 28 ஜனவரி, 2010

பெண் சிசுவின் கேள்வி..!

அம்மா...
நான் செய்த
தவறென்ன...
உணர்ச்சியால்
நீ செய்த
திரைமறைவு
தப்பிற்கு...

நானல்லவா
குப்பை தொட்டியில்
வீசப்பட்டிருக்கிறேன்..?

திங்கள், 25 ஜனவரி, 2010

உயிர்ப்பித்தல்..!

தென்றல் காற்றும் உன் நினைவுகளும்

ஒன்றுதான் போல…
தென்றல் காற்று என்
இதய அறைகளை நிரப்பியபடி
வினாடிக்கு வினாடி
என்னை உயிர்ப்பித்து விட்டுச் செல்கிறது..!
உன் நினைவுகளோ...
என் இதயத்தை நிரப்பி விட்டு
நம் காதலை ஒவ்வொரு வினாடியும்
உயிர்ப்பித்து விட்டுச் செல்கிறது..!

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

உன் புன்னகைக்கு..?

காதில் ஆடும் லோலாக்கு
மூக்கில் மின்னும் மூக்குத்தி
கழுத்தில் நிறைந்த தங்கச் சங்கிலி
விரலில் ஜொலிக்கும் வைர மோதிரம்
என ஒரு பொன்னகைக் கூடமே
உன் அழகிற்கு அழகு
சேர்த்தாலும்..?
அவைகள் என்றுமே
உன் புன்னகைக்கு ஈடாகாது..!

வியாழன், 21 ஜனவரி, 2010

உயிருள்ள சிற்பமே..!

காஜிராஹோ சிற்பங்கள்
கண்ணைக் கவரும்..!
மாமல்லபுரத்துச் சிற்பங்கள்
மனதைக் கவரும்..!
உயிரற்ற சிற்பங்களுக்கே
இவ்வளவு வசீகரம் எனில்
உயிருள்ள சிற்பமே
உன்னழகிற்கு கேட்கவா வேண்டும்..!

புதன், 20 ஜனவரி, 2010

சுவாசித்து மகிழ்கிறாய் என்பதற்க்காக..!

என் கவிதைகளை

நீ வெறுமனே
வாசித்துப் போகாமல்
சுவாசித்து மகிழ்கிறாய்
என்பதற்க்காகவே…
நாள்தோறும்...
கவிதைகளாக
எழுதிக் கொண்டிருக்கிறேன்..!
உனக்காகவே...
அதுவும் உன்னைப் பற்றியே..!

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

வசியம் செய்தாய்..!

என்னைத்தானே வசியம் செய்தாய்..!

என் பேனாவை எப்படி
வசியம் செய்தாய்..?
பார்… அது எப்போதும்
உன் பெயரையே
கிறுக்கிக் கொண்டிருக்கிறது..!

வெள்ளி, 15 ஜனவரி, 2010

மலருக்காக மலரிடம் நான் விட்ட தூது..!

உன் கார்மேகக் கூந்தலில்


பூச்சூடுவதற்க்காக

நான் வாங்கிய

ரோஜாமலரிடம் சொன்னேன்...


‘மெல்லிய மலரே...

உன்னை விட மென்மையானவளிடம்

உன்னைச் சூடக் கொடுக்கிறேன்...

அவள் கார் மேகக் கூந்தலில்

அழுத்தமாய் உட்காராதே

அவளுக்கு காயம் பட்டுவிடும்...’ என்று...



மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...’ என்றது


அவளைப் பார்த்ததும்

அழகாய் ஒரு புன்னகையை

வீசி விட்டு...

அப் பெண்மையிடம்

என் காதலை மென்மையாய்ச் சொல்... என்றேன்


மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!


என்னவளின் மனசு

போல உன் நிறமிருக்கிறது

என்று பெருமை கொள்ளாதே..?

அவளது மனது..

வெண்ணிலவை விட வெண்மையானது

வெண் பனியை விடத் தூய்மையானது..!

என்றேன்..!


மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...’ என்றது..!


உனக்கு வாசமில்லை என்று வருந்தாதே...

அவளுக்கு வாசமுண்டு...

அவள் வாசத்தை

நீ சுவாசித்தால்

நீயும் மணக்கும் மலராவாய்...

மல்லிகைப் பூவாவாய்...

நீ மணந்தால் மட்டும் போதாது

அவள் வாசத்தை வாங்கி

என்னிடம் அனுப்பு

நானும் அதை சுவாசிக்க வேண்டும்...

என்றேன்...


மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...


அப்படியே செய்கிறேன்’ என்றது..!


என்னன்பையும்

என் காதலையும்

அவளிடம் அன்பாய்ச் சொல்...

அவள் நினைவில்தான் வாழுகிறேன்...

நிஜத்தில் அவளின்று வாடுகிறேன்

என்றும் சொல்லென்றேன்..!


மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!


சொல்லி விடுமென்று காத்திருந்தேன்..?

அந்த மலரோ...

உன் கார்மேகக் கூந்தலில்

ஏறிய மயக்கத்தில்

அத்தனையும் மறந்துவிட்டு

அசடு வழிந்தபடி சிரித்தது..!

அதுவும் என்னைப் போலவே..!

மலரிடம் நான் விட்ட தூது..!

உன் கார்மேகக் கூந்தலில்

பூச்சூடுவதற்க்காக
நான் வாங்கிய
ரோஜாமலரிடம் சொன்னேன்...

‘மெல்லிய மலரே...
உன்னை விட மென்மையானவளிடம்
உன்னைச் சூடக் கொடுக்கிறேன்...
அவள் கார் மேகக் கூந்தலில்
அழுத்தமாய் உட்காராதே
அவளுக்கு காயம் பட்டுவிடும்...’ என்று...

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது

அவளைப் பார்த்ததும்
அழகாய் ஒரு புன்னகையை
வீசி விட்டு...
அப் பெண்மையிடம்
என் காதலை மென்மையாய்ச் சொல்... என்றேன்
மலரும் அதற்க்கு

‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!

என்னவளின் மனசு
போல உன் நிறமிருக்கிறது
என்று பெருமை கொள்ளாதே..?
அவளது மனது..
வெண்ணிலவை விட வெண்மையானது
வெண் பனியை விடத் தூய்மையானது..!
என்றேன்..!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது..!

உனக்கு வாசமில்லை என்று வருந்தாதே...
அவளுக்கு வாசமுண்டு...
அவள் வாசத்தை
நீ சுவாசித்தால்
நீயும் மணக்கும் மலராவாய்...
மல்லிகைப் பூவாவாய்...
நீ மணந்தால் மட்டும் போதாது
அவள் வாசத்தை வாங்கி
என்னிடம் அனுப்பு
நானும் அதை சுவாசிக்க வேண்டும்...
என்றேன்...

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...
அப்படியே செய்கிறேன்’ என்றது..!

என்னன்பையும்
என் காதலையும்
அவளிடம் அன்பாய்ச் சொல்...
அவள் நினைவில்தான் வாழுகிறேன்...
நிஜத்தில் அவளின்று வாடுகிறேன்
என்றும் சொல்லென்றேன்..!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!

சொல்லி விடுமென்று காத்திருந்தேன்..?
அந்த மலரோ...
உன் கார்மேகக் கூந்தலில்
ஏறிய மயக்கத்தில்
அத்தனையும் மறந்துவிட்டு
அசடு வழிந்தபடி சிரித்தது..!
அதுவும் என்னைப் போலவே..!

செவ்வாய், 5 ஜனவரி, 2010

என்னுயிரைச் சிறை பிடித்தாய்..!

அன்ன நடை நடந்து வந்து


அடி மனதை வருடி விட்டாய்..!

பின்னலிடை போட்டு வந்து

பித்தம் கொள்ள வைத்து விட்டாய்..!

மின்னலொரு பார்வையிலே

எனைக் காதலிக்க வைத்து விட்டாய்..!

உன்னுயிரைத் திறந்து விட்டு

என்னுயிரைச் சிறை பிடித்தாய்..!

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

என்ன வித்தியாசம்..?

கதைக்கும்


கவிதைக்கும்

என்ன வித்தியாசம்..?

நான் பேசினால்

அது கதை..!

நீ பேசினால்

அது கவிதை..!