செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

கண்டு கொண்டேன் கடவுளை

கடவுளைத் தேடித் தேடி


தேய்ந்து போனது

கால்கள்!

காண முடியாமல்

காய்ந்து போயின

கண்கள்!

இறுதியில்

இமைகளை

மூடிக் கொண்டு

தேடினேன்!

ஞானம் பிறந்தது...

பத்து மாதங்களாய்

கருவறையில் காத்து

பெற்று வளர்த்த

தாயே கடவுள்..!

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

உன்..(..)..நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!

இப்பொழுதெல்லாம்


உனக்கு என்னுடன்

பேசப்பிடிப்பதில்லை

புது நண்பர்கள்

புது உலகமென

புதிய வாழ்க்கையில்

ஐக்கியமாகி விட்டாய்

காத்திருந்த எனக்கு

தனிமை மட்டும்

உன் பரிசாய்

உன் பரிசு

என்று அறிந்ததால்

தனிமையையும்

நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!