புதன், 17 மார்ச், 2010

உன் அருகாமைச் சுகத்தில்..!

எனைப் பார்த்தும்
பார்க்காமல் போனது ஏன்..?
என்னிடம் பேச நினைத்தும்
பேசாமல் போனதேன்..?
என அத்தனையும் உனைப் பார்த்ததும்
கேட்க வேண்டுமென நினைப்பேன்..!
உனைப் பார்த்த வினாடியில்
அத்தனையும் மறந்தபடி
உன் அருகாமைச் சுகத்தில்
அசைவற்றுப் போய் விடுகிறேன்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக