அதிகாலையில் கூவும் குயிலாய்
உன் மயக்கும் குரல்..!
அதிகாலையில் உதிக்கும் சூரியனாய்
உன் மஞ்சள் முகம்..!
அதிகாலையில் எழுப்பும் அன்னையாய்
உன் அன்பு எழுப்பல்..!
அதிகாலையில் மலரும் மல்லிகையாய்
உன் அழகிய புன்னகை..!
இந்த சுகங்களத்தனையும்
அதிகாலையிலேயே எனக்கு
கிட்டுமென்றால்...
என் காலம் முழுதும் எனக்கு
அதிகாலையாகவே இருக்கட்டும்..!
என்னவளின் அழகு தரிசனம்
எனை அனுதினமும் அள்ளித் தின்னட்டும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக