செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

கண்டு கொண்டேன் கடவுளை

கடவுளைத் தேடித் தேடி


தேய்ந்து போனது

கால்கள்!

காண முடியாமல்

காய்ந்து போயின

கண்கள்!

இறுதியில்

இமைகளை

மூடிக் கொண்டு

தேடினேன்!

ஞானம் பிறந்தது...

பத்து மாதங்களாய்

கருவறையில் காத்து

பெற்று வளர்த்த

தாயே கடவுள்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக