கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!
காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!
இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!
ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக